LOGO
Reply to Thread New Thread
Old 05-20-2012, 04:01 PM   #1
9mm_fan

Join Date
May 2007
Age
54
Posts
5,191
Senior Member
Default படித்ததில் பிடித்தது..
அன்பர்களே! படித்ததில் பிடித்த கவிதைகள், சொற்றொடர்கள், பதிவுகளை இங்கே பதிவு செய்யுங்களேன்!

அட்மின்! இதற்கான பிரத்யேக திரி தமிழ்த் தொகுப்பில் இருக்கேமேயானால் இங்கேயுள்ள எனது பதிவுகளை அங்கே இடமாற்றம் செய்யவும்! நன்றி.
9mm_fan is offline


Old 03-15-2006, 07:00 AM   #2
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
சாணிப்பால் ஊற்றி
சவுக்கால் அடித்தான்
என் பூட்டனை உன் பூட்டன்

காலில் செருப்பணிந்ததால்
கட்டி வைத்து உதைத்தான்
என் பாட்டனை உன் பாட்டன்

பறைக்கு எதுக்குடா படிப்பு?
என
பகடி செய்து ஏசினான்
என் அப்பனை உன் அப்பன்

"உங்களுக்கென்னப்பா?
சர்க்காரு வேலையெல்லாம்
உங்க சாதிக்குத்தானே" என
சாமர்த்தியம் பேசுகிறாய் நீ

ஒன்று செய்!
உன்னைறியாத ஊரில் போய்
உன்னைப்பறையனென்று சொல்
அப்போது புரியும் என் வலி


- இராசை கண்மணி ராசா
HedgeYourBets is offline


Old 05-20-2012, 04:03 PM   #3
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
என்னைக்கருவுற்றிருந்த மசக்கையில்
என் அம்மா தெள்ளித்தின்றதைத்தவிர
பரந்த இந்நாட்டில் எங்கள் மண் எது?

தடித்த உம் காவிய இதிகாசங்களில்
எந்தப்பக்கதில் எங்கள் வாழ்க்கை?

எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலேயே
சூரிய சந்திரச்சுழற்சிகள் இன்னும் எது வரை?

எங்களுக்கான பங்கை ஒதுக்கச்சொல்லியல்ல
எடுத்துக்கொள்வது எப்படியென
நாங்களே எரியும் வெளிச்சத்தில் கற்றுக்
கொண்டிருக்கிறோம்

அதுவரை அனுபவியுங்கள்
ஆசீர்வதிக்கிறோம்


- ஆதவன் தீட்சண்யா
Lt_Apple is offline


Old 05-21-2012, 12:46 AM   #4
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
அங்கே மழை பெய்கிறது!

எங்கோ
ஒரு நிலத்தில்
புதைக்கப்பட்ட பிணங்கள்
புரண்டு படுக்கின்றன

அப்பிணங்களைத் தீண்டுகிறது
நிலத்தில் இறங்கிய மழையின்
நீர்க்கால் ஒன்று

புதையுடல்கள்
துயில் கலைந்தனபோல்
உடல் முறித்து எழ முயல்கின்றன

அவற்றின் உதடுகளில்
இன்னும் பதியப்படாத சொற்களும்
உலக மனசாட்சியின் மீது
வாள்செருகும் வினாக்களும்
தொற்றியிருக்கின்றன

தாம் சவமாகும் முன்பே
புதைபட்டதைத்
தம்மைக் கடந்திறங்கும் வேர்த்தளிர்களிடம்
கூறியிருக்கின்றன

அவை
தாம் இறக்கவில்லை
தலை பிளந்து கொல்லப்பட்டோம் என்பதை
மண்புழுக்களிடம் தெரிவித்திருக்கின்றன

மழைத்துளியிடம்
எமது மைந்தர்கள் மீது
இதே குளுமையுடனும்
கருணையுடனும்
பருவந்தவறாது பயின்றிடு என்று மன்றாடுகின்றன !


-- மகுடேசுவரன்
NeroASERCH is offline


Old 05-21-2012, 12:52 AM   #5
Big A

Join Date
Oct 2005
Age
51
Posts
4,148
Administrator
Default
மருதம்

ஊருக்கெல்லாம் கோடியிலே
முந்திரிக் கொல்லே

உக்காந்தால் ஆள்மறையும்
முந்திரிக் கொல்லே

செங்கமலம் குளிச்சுப்புட்டு
அங்கிருந்தாளாம்

ஈரச்சேலை கொம்பில் கட்டி
காத்திருந்தாளாம்

நாட்டாண்மைக்காரன் மகன்
அங்கே போனானாம்

வெக்கப்பட்டு செங்கமலம்
எந்திரிச்சாளாம்

நாட்டாண்மைக்காரன் மகன்
கிட்டே போனானாம்

வெக்கப்பட்டு செங்கமலம்
சிரிச்சிக்கிட்டாளாம்

உக்காந்தால் ஆள்மறையும்
முந்திரிக் கொல்லே

ஊருக்கெல்லாம் கோடியிலே
முந்திரிக் கொல்லே.


---- ஞானக்கூத்தன்
Big A is offline


Old 05-21-2012, 01:12 AM   #6
LottiFurmann

Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
Default
ஊர் ஏரியில்
நீர் ஆடியில்
முகம் திருத்தும்
கருவேல மரங்கள்
கடும் கோடைகளில்
கண்ணாடி உடைகையில்
தலைவெட்டிக் கொள்கின்றன.


--- அழகிய பெரியவன்.
LottiFurmann is offline


Old 05-21-2012, 01:12 AM   #7
LottiFurmann

Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
Default
அண்டை வீட்டின்
மரம்
உதிர்க்கும்
சருகுகளைக் கண்டு
தினமும்
சபிக்கிறாள்
உடனுறையும் நாயகி
அவள்
உதிர்த்துக் குவியும்
சொற்குப்பைகளை
தினமும் பெருக்குகிறது
அம்மரம் அனுப்பும்
காற்று.


---- அழகிய பெரியவன்
LottiFurmann is offline


Old 05-21-2012, 01:23 AM   #8
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
கவிதை எழுதுவது
என்பது
ஒரு குண்டு பல்பை
ஹோல்டரில் மாட்டுவது போல் இருக்கிறது
முழுமையானதின்
அமைதியை ஏந்தி
பல்ப்
ஒளிவீசத் தொடங்குகிறது
ஒரு
மெல்இழை
நிசப்தத்தில்
எவ்வளவு நீள
நன்கணம்.


---- தேவதச்சன்
softy54534 is offline


Old 05-21-2012, 07:59 AM   #9
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
குழந்தைகள் என்றால்...

குழந்தைகளென்றால் கடவுளுக்கு ரொம்பப் பிடிக்குமாம்
குழந்தைக்கு அதைப் பற்றி என்ன?
கடவுள் எப்போதும் குழந்தைகளோடு இருக்கிறாராம்
குழந்தைக்கு அதைப் பற்றி என்ன?
அண்டத்திலேயே பெரிய சிம்மாசனம் கடவுளுடையதுதானாம்
குழந்தைக்கு அதைப் பற்றி என்ன?
கடவுள் அதிலேவந்து குந்தியிருகாதப்போ
குழந்தைகள் அதிலே ஏறி உட்கார்ந்து நடிக்குமாம்
கடவுளுக்கு அதைப் பற்றி என்ன?
சமயங்களில் குழந்தைகள் அதிலே சிறுநீரும் பெய்துவிடுமாம்
கடவுளுக்கு அதைப் பற்றி என்ன?


-- தேவதேவன்
doctorzlo is offline


Old 05-21-2012, 08:02 AM   #10
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
உண்டியல் குலுக்குகையில்

உன் இரத்தத்தில் ஒலிக்கவில்லையா
”தர்மம் போடுங்க சாமீ!” என்றபடி
பிட்சா பாத்திரத்துடன் ஒரு பரதேசி
வீடு வீடாய் ஏறி இறங்கும் காட்சி?

அதைத்தானோ
”நீயே கடவுள்
தர்மமே உன் கடமை!” என்று
கம்பீரமாய்ப் பாடுகிறான் கவிஞன்?


-- தேவதேவன்
softy54534 is offline


Old 05-21-2012, 08:07 AM   #11
Raj_Copi_Jin

Join Date
Oct 2005
Age
48
Posts
4,533
Senior Member
Default
பருந்து

உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது
பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா,
பருந்து ஒன்று
கோழிக் குஞ்சொன்றை
அடித்துச் சென்ற காட்சியை?

அதன் கூர்மையான நகங்களால்
உங்கள் முகம் குருதி காணப்
பிராண்டப் பட்டதுபோல்
உணர்ந்திருக்கிறீர்களா?

பறவை இனத்திற் பிறந்தாலும்
விண்ணிற் பறக்க இயலாது
குப்பை கிண்டித் திரியும் அதனை
துடிக்கத் துடிக்க ஓர் உயரத்திற்கு
அழைத்துச் சென்ற அந்தக் காட்சி!

அக் குஞ்சோடு குஞ்சாய் மரித்து
அப் பருந்தோடு பருந்தாய்
பறந்து திரிந்திருக்கிறீர்களா
பாதையில்லா வானத்தில்?

குப்பைகளை
ஆங்கே நெளியும் புழுக்களை
கோழிக் குஞ்சுகளை
அவை தங்களுக்குள்ளே இடித்துக் கொள்வதை
புலம்பல்களை
போரை
போர்க்களங்களில்
பிணமாகி அழியும் மனிதர்களை
பிணங்களின் அழுகிய வாழ்வை-
நீங்களும்தான் பார்த்திருப்பீர்களில்லையா?

அது தன் சிறகு மடித்து
தனது பனித்த கண்களுடன்
ஒரு குன்றின் மீதமர்ந்திருக்கையில்
அய்யம் சிறிதுமின்றி
ஒரு தேவதூதன் போன்றே காணப்படுகிறதில்லையா?

-- தேவதேவன்
Raj_Copi_Jin is offline


Old 06-09-2006, 07:00 AM   #12
Paul Bunyan

Join Date
Jul 2007
Age
59
Posts
4,495
Senior Member
Default
தனியாக இல்லை

சாலையின் ஓரத்தில்
தன்னந்தனியே வீழ்பவன்
யாரோ ஒருவன்
தன்னைத் தொட்டுத் தூக்கும்போது
நினைக்கிறான்
தான் தனியாக இல்லை
என்று
சாலையின் ஓரத்தில் வீழும்
யாரோ ஒருவனைத்
தொட்டுத் தூக்கும்
யாரோ ஒருவன்
நினைக்கிறான்
தான் தனியாக இல்லை
என்று


-- மனுஷ்ய புத்திரன்
Paul Bunyan is offline


Old 05-21-2012, 03:20 PM   #13
Paul Bunyan

Join Date
Jul 2007
Age
59
Posts
4,495
Senior Member
Default
எப்போது வருவாய்

நீ எப்போது
வருவாய்?
அந்தப் பெண்
கண்களில் நீர் தளும்ப
யாரிடமோ
தொலைபேசியில்
இந்தக் கேள்வியைத்
திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறாள்
நான் கவனிப்பதைப் பற்றி
கவலைப்பட அவளுக்கு
எந்த அவகாசமும் இல்லை
எப்போது வருவாய்
என்பதைக் கேட்பதைத் தவிர
அவளுக்கு இந்த உலகத்திடமிருந்து
தெரிந்துகொள்ள எதுவும் இல்லை
அவள் பிடிவாதமாக இருந்தாள்
மன்றாடுதலுடன் இருந்தாள்
தனிமையாக இருந்தாள்
எந்தக் கணமும் உடைந்து அழக்கூடியவளாக இருந்தாள்
எத்தனை யுகங்களாய்
இதே குரலில்
இதே கண்ணீருடன்
இதே கேள்வி கேட்கப்படும்
என்று தெரியவில்லை
வர வேண்டிய யாரோ ஒருவர்
இன்னும் வராமலேயே
இருந்துகொண்டிருக்கிறார்


-- மனுஷ்ய புத்திரன்
Paul Bunyan is offline


Old 05-21-2012, 03:37 PM   #14
Paul Bunyan

Join Date
Jul 2007
Age
59
Posts
4,495
Senior Member
Default
பாலை

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.

என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.


--- பிரமிள்
Paul Bunyan is offline


Old 05-21-2012, 03:47 PM   #15
Big A

Join Date
Oct 2005
Age
51
Posts
4,148
Administrator
Default

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!


-- நகுலன்
Big A is offline


Old 05-22-2012, 06:17 AM   #16
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
only kavidhai???? appadina vidu jut than
Fegasderty is offline


Old 05-22-2012, 03:20 PM   #17
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
San_K

கவிதை மட்டுமே அல்ல! எதுவேணாலும் கொண்டுவாருங்கள்! படித்து இன்புறுகிறோம்!
softy54534 is offline


Old 05-31-2012, 08:57 PM   #18
S.T.D.

Join Date
May 2008
Age
43
Posts
5,220
Senior Member
Default
என் பெயர் - மருதாயி
- இன்குலாப்




ஆன்ற தமிழ்ச் சான்றோரே!
தொல்காப்பியம்
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி
கம்ப இராமாயணம்
பொ¢யபுராணம்
மறந்து விட்டேன் -
திருக்குறள்

எல்லாவற்றிலும் சுட்டப்பட்டவள் நான்
தாய்மொழி - தமிழ்
பெயர் - மருதாயி
தொழில் - பரத்தை

என்னைக் கடைமகள் எனலாம்..
மதுரையைக் கொளுத்திய
கற்பரசியே -
தலையாய கற்பினள் அல்லள்!

உங்கள்
மூத்த தமிழ் அளவுகோலில்..
கற்புத் தோன்றிய அன்றைக்கே
நானும் தோன்றிவிட்டேன் !

அய்யா
ஆன்ற தமிழ்ச் சான்றோரே!
என்னிடம் முதலில் வந்தவன்
உங்கள் கொள்ளுப் பாட்டன்..
இப்பொழுது
வந்து போனவன்
கொள்ளுப் பேரன்!

என்றாலும்
பாட்டன் எதிர்பார்த்தான் பாட்டியிடம்
"பெய்யெனப் பெய்ய"
தன் சடலம் எ¡¢யும் போது
உடன்வேக..
பாட்டி ஒருபோதும்
பாட்டனிடம் கேட்கவில்லை
"பெய்யெனச் சொல்லுக
உடன் வேக"

இருக்கையில் சில சமயங்களிலும்
போகையில் சில சமயங்களிலும்
பாட்டி
தன் தங்கையைத் தாரமாக்குவாள்

இல்லாவிடினும் இவன் மேய்வான்..
பத்தினியைப் பறிகொடுத்த
பாட்டனுக்கு
மச்சினியைக் கைப்பிடித்த
ஆறுதல்..

இல்லத்தரசி இருக்க என்னிடம் வந்தவனுக்கும்
மனைவி இருக்க மச்சினியைப் பிடித்தவனுக்கும்
ஒரு கீறலும் இல்லை கற்பில்..

தமிழ்க் குடும்பம் புனிதமானது!
தமிழ்ச் சமூகம் காலகாலமாய்க்
கற்புடையது.!

விரும்பியவனைச் சேர்வது
கற்பாகாது.
கட்டியவனை ஒப்புவதுதான்
கற்பாகும்..

கட்டியவன் முகமன்றி
வேறு முகம் கூடாது
காண.
கட்டியவன் நிழலன்றி
வேறு நிழலில்லை
பட.

அய்யா! அன்றதமிழ்ச் சான்றோரே!
கற்பரசி நினையாவிடினும்
கண்டவன் அவளை நினைத்தால்
அவள் கற்புக்கரசி ஆகமாட்டாள்..
கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார்..

தமிழ்நாட்டுக் குரங்கும் மீனும்
கற்புடையவைதாம்.

கைம்மை உய்யாக் காமர் மந்தி
ஓங்குமலை அடுக்கத்துப்
பாய்ந்து
உயிர் செகுக்கும்.

தன்கணவன்மீன் அல்லாத
வேறு ஆண்மீனைத் தொடநேர்ந்த
மனைவிமீனை
வெட்கம் பிடுங்கித் தின்னும்..
தற்கொலை செய்ததோ
என்னவோ
தண்ணீ¡¢ல்..

உடன் கட்டை ஏறிய
பத்தினிப் பெண்ணைப்
பாராட்டாத
தமிழ் எழுத்தில்லை.
பொ¢யார் எழுத்தைத் தவிர.

பாவாடையும் சேலையுந்தான்
தமிழ்ப் பண்பாடு..
சு¡¢தாரும் பேண்டும்
கவர்ச்சிக் கண்றாவி!
மொபட் ஓட்ட பேண்டுதான் வசதியா?
மொபட் ஓட்டாதே..
படைநடை பயிலாதே..
தமிழ்ப் பெண் அடக்கமானவள்..
ஆறடிக் கூந்தல் இன்னுமோர்
அடையாளம்.

கூந்தல்வார நேரமில்லையா?
மூக்கடைப்பு நோய்த் தொலலையா?

கூந்தலைக் குறைக்காதே
தமிழ் குறைந்து போய்விடும்!

ஒருவனுக்கு உண்மையாய்
இருப்பதே தமிழ்க் கற்பு..
அவன் கல்லானாலும் மண்ணானாலும்
கட்டியவள் ஏற்கெனவே கன்னிதானா
என்று எதிர்பார்ப்பதே
தமிழ் மரபு நியாயம்..
தமிழர் அனைவரும் உறுதி கொள்ளலாம்.

இங்கிலாந்து நடத்திய
கன்னிமைச் சோதனையை
இல்லறம் தொடங்குவோன்..
நடத்திப் பார்க்கலாம்
தேறினால் மட்டுந்தான்
பண்பாடு தேறும்..
தமிழ்க் குடும்பம் புனிதமானது..

அய்யா ஆன்றதமிழ்ச் சான்றோரே!
உங்கள் பண்பாட்டை நீங்கள் பிடித்த
காலகாலமாய் நானும் நடக்கிறேன்
கற்புத் தோன்றிய அன்றைக்கே
நானும் தோன்றிவிட்டேன் -
தாய்மொழி - தமிழ்
பெயர் - மருதாயி
தொழில் - பரத்தை !
S.T.D. is offline


Old 06-01-2012, 03:24 AM   #19
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default
"ஒருவருக்கொருவர்
விசாரிப்புகளால்
விசால மடைகிறோம்
சுமைகளை மறந்து
சுகமடைகிறோம்

கடனழுத்தியும்
இடைவெளி வருத்தியும்
களைக்கவிடாமல்
காத்து வருவதே
ஞாயிறுதான்"

சுட்டதுதான் .. அசல் மறந்து விட்டது
MannoFr is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 10:41 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Friendly URLs by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity