Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
இன்று இறுதி சுற்று
பரிசுகள் 1. 5லட்சம் ரூபா பெறுமதியான வைர நகைகள் 2. 3லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் 3. 1.5 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் பங்கு பற்றிய 5 ஜோடிகள் 1. கதிரேசன் / ஜெயசுதா 2. நரேஷ் / மஹாலட்சுமி 3. கில்பேட்் / பிரியா 4. பழனியப்பன் / மீனா 5. பாண்டியன் / மேகலா இந்த ஐந்து ஜோடிகளும் ஏற்கனவே 1 லட்சம் ரூபா பெறுமதியான வைர நகைகளை முதல் சுற்றிலும் இரண்டாவது சுற்றில் புத்தம் புது கார் பரிசு பெற்றும் இன்று இங்கு இறுதி சுற்றுக்கு வந்துள்ளனர். முதல் பரிசு கதிரேசன் / ஜெயசுதா ![]() ![]() ![]() இரண்டாம் பரிசு பழனியப்பன் / மீனா ![]() ![]() ![]() மூன்றாம் பரிசு பாண்டியன் / மேகலா ![]() ![]() ![]() 4 & 5 இடங்கள் நரேஷ் / மஹாலட்சுமி கிபேர்ட் / பிரியா இருவருக்குமே 15 புள்ளிகள் ![]() ![]() ![]() தொகுப்பு: ஆனந்தக் கண்ணன் அனிஷா ![]() ![]() ![]() ![]() |
![]() |
![]() |
#2 |
|
ஜோடிப் பொருத்தம்
ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் 8.30 - 9.30 ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முதல் பரிசாக ரூபா1 லட்சம் பெறுமதியுடைய வைர நகையையும் இரண்டாம் பரிசாக தங்க நகைகளையும் மூன்றாம் பரிசாக 40,000 பெறுமதியான பொருட்களையும் அள்ளிச் செல்கின்றார்கள் - கலந்துகொள்ளும் போட்டியாளர்கள். அவர்கள் முறையே அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, மீண்டும் 1, 2, 3 பரிசுகளைத் தட்டிச் செல்கின்றனர். 25 -10 2008 சனிக்கிழமை மாறுதலுக்காக நடந்த போட்டியில் சின்னத்திரையின் 4 மணமக்கள் - ஜோடி கலந்துகொண்டனர் நன்றி சன் தொலக் காட்சி வாசு விக்கரம் - ஜெயலட்சுமி மஞ்சரி - குரு கமலேஷ் - சிந்து விஸ்வா- ஸ்ரீ ப்ரியா இவர்களுக்கும் போட்டியில் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகப் படுத்தினர். 1, 2 ,3 பரிசுகள்தான் வழங்கப் படவில்லை --------------------------------- ஜோடிகளின் படங்கள் தேவையா???? http : // groups.yahoo.com/group/minminikal/ need to login |
![]() |
![]() |
#3 |
|
இறுதிப்போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு யாராவது திரைப்பட பிரபலங்கள் அழைக்கப்படுவார்கள் என்று நினைத்தோம். (நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை)
பங்குபெற்ற போட்டியாளர்கள் எல்லோரும் ஏற்கெனவே காலிறுதிச்சுற்றில் ஒரு லட்சரூபாய் பெறுமான முதல் பரிசாக வைர நகைகள், அரையிறுதிச்சுற்றில் முதல் பரிசாக புத்தம்புது கார் (!!) ஆகியவற்றை பரிசாக பெற்றவர்கள்தான். அத்துடன் 'விலை என்ன?' என்ற் சுற்றிலும் பல பரிசுப்பொருட்களையும் (அடிஷனலாக) பெற்றிருந்தனர். ஆனாலும் நேற்று முதலிடத்தைப்பெறும் வாய்ப்பை இழந்த சிலர், கடைசியில் பேசும்போது, ஏதோ ஒன்றும் கிடைக்காதது போலவும், நிறைய கொண்டு வந்து, இழந்துவிட்டுப் போவதுபோலவும் பேசியது என்னவோ போலிருந்தது. அதிலும் ஒரு ஜோடி பாவம், ரொம்ப கான்ஃபிடண்ட்டாக 1200 கேள்விகளைத் தயார் செய்து அவை ஒவ்வொன்றுக்கும் இருவரும் இந்த பதிலைத்தான் சொல்ல் வேன்டும் என்று தயார் செய்து வந்திருந்தார்களாம். ஆனால் அவர்களை காலை வாரிவிட்டதே அந்த 'கேள்விநேரம்' சுற்றுதான். அவர்கள் எதிர்பாராத கேள்விகள் கேட்கப்பட்டதால், ஐந்தில் ஒரு கேள்விக்கு மட்டுமே பதிலளித்து மைனஸ் 18 மதிப்பெண் பெற்று வெற்றிவாய்ப்பை இழந்தனர். ஜஸ்ட் இன்னொரு கேள்விக்கு சரியான பதிலளித்திருந்தால் அட்லீஸ்ட் மூன்றாவது இடம் (ஒன்றரை லட்சம் தங்கம்) பெற்றிருக்கலாம். அதனால் அந்தப்பெண் ரொம்ப சோர்ந்து காணப்பட்டார். நான்காவது, ஐந்தாவது இடம் பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசு எதுவும் வழங்கப்படவில்லை. (ஏற்கெனவே முந்தைய சுற்றுக்களில் நிறைய வாங்கி விட்டனர் என்பது வேறு விஷயம்). காம்பியர்கள் இருவரில் ஆனந்தக்கண்ணனின் பங்கு 90 சதவீதம் என்றால், அனிஷாவின் பங்கு வெறும் 10 சதவீதமே. அவர் பக்கத்தில் நிற்க ஒரு பெண் காம்பியர் வேன்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டவர் போல இருந்தது. அவர் செய்த ஒரே வேலை, மதிப்பெண்கள் வாசிப்பது மட்டுமே. 'ஜோடிப்பொருத்தம்' முடிந்துவிட்டது. அடுத்து என்ன பொருத்தம் துவங்கப்போகிறது..? |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|