|
![]() |
#1 |
|
ராமநாதபுரம் அருகே பரமக்குடியைச் சேர்ந்த சோனைமுத்து என்பவரிடம் செல்போன் மூலம் நூதன முறையில் ரூ 9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
பரமக்குடி பாலன் நகரைச் சேர்ந்தவர் சோனைமுத்து(42). இவர் குவைத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளதாக செல்போனில் எஸ்எம்எஸ் வந்துள்ளது. அந்த செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டு பேசியபோது லண்டனைச் சேர்ந்த மார்க்கஸ் ஒயிட்டும், மும்பையைச் சேர்ந்த ரோஹிதாவும் ரூ 9 லட்சம் பணம் கட்டுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து ஐசிஐசிஐ வங்கியில் மெகா ரிவர் சேல்ஸ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் சோனைமுத்து ரூ 9 லட்சம் பணம் கட்டியுள்ளார். மேலும் ரூ 5 லட்சம் பணம் கட்டும்படி கூறியதால் சந்தேகமடைந்த சோனைமுத்துவின் மனைவி முத்துலட்சுமி இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மார்க்கஸ் ஒயிட், ரோஹிதா ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் கி பி 2012 டிலும் இந்த மாதிரி புருடாவை நம்புகிற "சோணகிரிகள்" இருகிறார்கள் என்றால் பாருங்கள் !!! முக்கால் மில்லியன் இங்க்லீஷ் பாவுன்ட் என்றால் சபலத்தை பாருங்கள் |
![]() |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|