View Single Post
Old 05-21-2012, 12:46 AM   #5
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
அங்கே மழை பெய்கிறது!

எங்கோ
ஒரு நிலத்தில்
புதைக்கப்பட்ட பிணங்கள்
புரண்டு படுக்கின்றன

அப்பிணங்களைத் தீண்டுகிறது
நிலத்தில் இறங்கிய மழையின்
நீர்க்கால் ஒன்று

புதையுடல்கள்
துயில் கலைந்தனபோல்
உடல் முறித்து எழ முயல்கின்றன

அவற்றின் உதடுகளில்
இன்னும் பதியப்படாத சொற்களும்
உலக மனசாட்சியின் மீது
வாள்செருகும் வினாக்களும்
தொற்றியிருக்கின்றன

தாம் சவமாகும் முன்பே
புதைபட்டதைத்
தம்மைக் கடந்திறங்கும் வேர்த்தளிர்களிடம்
கூறியிருக்கின்றன

அவை
தாம் இறக்கவில்லை
தலை பிளந்து கொல்லப்பட்டோம் என்பதை
மண்புழுக்களிடம் தெரிவித்திருக்கின்றன

மழைத்துளியிடம்
எமது மைந்தர்கள் மீது
இதே குளுமையுடனும்
கருணையுடனும்
பருவந்தவறாது பயின்றிடு என்று மன்றாடுகின்றன !


-- மகுடேசுவரன்
NeroASERCH is offline


 

All times are GMT +1. The time now is 10:34 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity