![]() |
ராஜ் டிவியில், சனி, ஞாயிறு நாட்களில் இரவு 9 மணிக்கு ஸ்டார் சிங்கர் ஒளிபரப்பாகி வருகிறது. இனி வெள்ளியன்றும் ஒளிபரப்பப்படும்
அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா நடுவராக வரும் இதில், இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்று மோதுவர். ஒவ்வொரு முறையும், முன்னணி திரை நட்சத்திரங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும் பங்கேற்று உடன் பாடுகின்றனர் |
பெண்களுக்கான `பரிசு விளையாட்டு'
ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி `பரிசு பத்தாயிரம்.' இல்லத்தரசிகளை மகிழ்விக்கும் இந்த விளையாட்டு நிகழ்ச்சியின் மூலம் இல்லத்தரசிகள் நாள்தோறும் பத்தாயிரம் ரூபாய் வரை வெல்லலாம். சொந்த பணத்தேவைகளுக்காக கணவனின் கையை எதிர்பார்க்கும் புத்திசாலிப் பெண்கள், தங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி தங்கள் செலவுக்குத் தேவையான பணத்தை பரிசாக வெல்லும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி அளிக்கிறது. |
ஒவ்வொரு ஞாயிறன்றும் பகல் 12 மணிக்கு ராஜ் "டிவி'யில் இசை விழா ஒளிபரப்பு நடக்கிறது.
பிரபல பாடகர், பாடகிகள் பங்கேற்று, தமிழ்நாடு முழுதும் நடந்த லட்சுமண் சுருதி குழுவினர் நடத்திய விழாக்களின் தொகுப்பு இதில் காட்டப்படும். --- விஜய் "டிவி'யில் கிராண்ட் மாஸ்டரில் வந்த காயத்ரி ஜெயராம், ராஜில் இப்போது! அதே பேச்சு; அதே சிரிப்பு. உடையிலும் அப்படியே! "அசத்தல் மாமியார் - கலக்கல் மருமகள்' நிகழ்ச்சியில் நான்கு சுற்று தமாஷான கலாய்ப்பு. பிரபலங்களின் மாமியார் - மருமகள் விவாதம் தமாஷாக இருக்கிறது. சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு. |
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்கான நிகழ்ச்சி இது. பிறந்த நாள் காணும் நபரின் புகைப்படத்தையும், அவருக்கு பிடித்த பாடலையும் ஒளிபரப்பி நேயர்களை மகிழ்விக்கிறார்கள். இந்நிகழ்ச்சி, ராஜ் டிவியில் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. |
Raj TV
ராஜ் டி.வி.யில் சனிக்கிழமை தோறும் இரவு 8.01க்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி அசத்தல் மாமியார்-கலக்கல் மருமகள்.
இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் மாமியார்களாக ஒரு பக்கமும், மருமகள்களாக மற்றொரு பக்கமும் இருந்து பல போட்டிகளை சந்திக் கின் றனர். பிரபல நடிகை காயத்ரி ஜெயராம் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பான வித்தியாசமான நான்கு சுற்றுகள் உள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் மாமியார்- மருமகள் ஆகியோருக்கு நடத்தப்படும் போட்டிகள் நகைச்சுவை துள்ளலுடன் ரொம் பவே ரசிக்க வைக்கிறது. இந்த வாரம் மாமியார்களாக பசி சத்யா மற்றும் எஸ்.எஸ்.பார்வதி மருமகள்களாக ரிந்தியா மற்றும் ராணி பங்கேற்கும் நிகழ்ச்சி விறுவிறுப்புடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. |
|
ஒவ்வொரு டி.வி. சேனலும் தங்கள் கோணத்தில் புதுமையான முறையில் தொடர்களை தருவதில் போட்டி போட்டு வருகின்றன. தொடர் என்றால் அழுகை என்ற எண்ணத்தை மாற்ற இப்போது டி.வி.க்கள் தயாராகி விட்டன.
ராஜ் டி.வி.யில் வெளிவரும் தொடர்களில் திருமதி ஜானகிராமன், காலத்துக்கேற்ற வகையில் புதுமையான கதையம்சத்துடன் உள்ளது. விருப்பமில்லாமல் மணந்து கொண்டதால், புகுந்த வீட்டில் ஒரு பெண் அவதிப்படுவது தான் கதை. திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8.30க்கு. இன்னொரு மெகா தொடர் சித்தாரா. பிரபல சினிமா நடிகை, அவளை பணம் கறக்கும் இயந் திரமாக்கிய அண்ணன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து பின்னப் பட்டுள்ளது. வார நாட்களில் மாலை 6.05க்கு. இது போல, நட்பின் பெருமை பேசும் தொடர், சிநேகிதி வார நாட்களில் மாலை 6.30 மணிக்கு. |
ராஜ் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் புரியாத புதிர்.
பல்வேறு பிரச்சினைகளால் மனம் உடைந்து போன புவனா, மும்பையில் பெரிய தொழில் அதிபரான ராஜேந்திரனிடம் வேலைக்கு செல்கிறார்.குழந்தையின்றி தவிக்கும் ராஜேந்திரன்- கவுசல்யா தம்பதிகளுக்காகவும் தன்னுடைய சூழ்நிலைக்காகவும் அங்கு வாடகை தாயாக இருக்க உடன்பட்டு ஒரு குழந்தையை சுமக்கிறாள். இந்த விஷயம் ஊரில் இருக்கும் புவனாவின் உறவினர் யாருக்கும் தெரியாது. இந்த சூழ்நிலையில் அவளது தந்தை சீனிவாசன் தனது நண்பர் ராமநாதனின் மகன் பிரகாசிற்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதித்து மகளிடம் கேட்க, கர்ப்பவதியான புவனா பிடிவாதமாக மறுத்து விடுகிறாள். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் தனது அடுத்த மகள் சித்ராவை பிரகாஷிற்கு திருமணம் செய்து வைக்க பேசி முடிக்கிறார். குழந்தையை பெற்று தந்ததற்காக ராஜேந்திரன் தம்பதியினரிடம் இருந்து 5 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்ட புவனா, தங்கை திருமணத்திற்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வரும் போது, அந்த பணத்தையும் இழக்க நேரிடுகிறது. அடுத்து என்ன நடக்கும்? எதிர்பார்ப்போடு கதை பின்னப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குரிய தொடராகி இருக்கிறது'' என்கிறார், இயக்குனர் செந்தில். |
ராஜ் டி.வி.யில் சனிக்கிழமை தோறும் இரவு 8.01க்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி அசத்தல் மாமியார்-கலக்கல் மருமகள்.
இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் மாமியார்களாக ஒரு பக்கமும், மருமகள்களாக மற்றொரு பக்கமும் இருந்து பல போட்டிகளை சந்திக் கின் றனர். பிரபல நடிகை காயத்ரி ஜெயராம் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பான வித்தியாசமான நான்கு சுற்றுகள் உள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் மாமியார்- மருமகள் ஆகியோருக்கு நடத்தப்படும் போட்டிகள் நகைச்சுவை துள்ளலுடன் ரொம் பவே ரசிக்க வைக்கிறது. இந்த வாரம் மாமியார்களாக பசி சத்யா மற்றும் எஸ்.எஸ்.பார்வதி மருமகள்களாக ரிந்தியா மற்றும் ராணி பங்கேற்கும் நிகழ்ச்சி விறுவிறுப்புடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. |
ராஜ் டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை தினந்தோறும் இரவு 8.01-க்கு ஒளிபரப்பாகி வரும் புதிய கலக்கல் மெகா தொடர் காமெடி.காம்.
சோகத்தையும் பிரச்சினைகளையும் மட்டுமே கதைக்களமாக கொண்டு பல தொடர்கள் வலம் வந்து கொண்டிருக்கும் வேளையில் அதிரடி நகைச்சுவையுடன் அழுத்தமான கதை அமைப்புடன் அரங்கேறியுள்ளது இந்த தொடர். அப்சர், பிருந்தா தாஸ், ஒய். விஜயா, சிவகுமார், வந்தனா மற்றும் பலர் நடித்துள்ள இந்த தொடரை கதை, திரைக்கதை, வசனம் எழுதி அனைவரையும் ரசிக்கும் வண்ணம் இயக்கியுள்ளார் வெங்கட். |
ராஜ் டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய நிகழ்ச்சி காதல் மீட்டர்.
பிரம்மாண்டமான அரங்கில் படம் பிடிக்கப்பட்டு ஒளிப்பரப்படும் இந்த நிகழ்ச்சியில் மூன்று இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் திரைப்பட நடிகையை கவரும் வகையில் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு விருந்தினர் கலந்து கொள்ள அவர்களை கவரும் வகையில் பல வகையான பிரிவுகளில் இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த முயல்வது நகைச்சுவை தோரணமாக உள்ளது. இளைஞர்களின் பதில்கள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு இறுதியில் அதிக மதிப் பெண்கள் பெற்ற நபர் நடிகையை கவர்ந்த நாயகனாக அறிவிக்கப்படுகிறார். எத்தனையோ வகையான நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த வித்தியாசமான விளையாட்டு நிகழ்ச்சி நேயர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. |
விஜய் டிவியில், சங்கமம் நிகழ்ச்சியை தொகுத்து வந்த பாடகி மாதங்கி, இப்போது ராஜ் டிவியில், இசை மழையில், இசையமைப்பாளர் பரத்வாஜுடன் பங்கேற்கிறார்.
தமிழகம் முழுவதும், லஷ்மண் சுருதி குழுவினர் மூலம் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதை ஒளிபரப்ப ராஜ் டிவி முடிவு செய்துள்ளது. இன்று பகல் 12 மணிக்கு, திருச்சியில் நடந்த இசை நிகழ்ச்சி தொகுப்பு காட்டப்படுகிறது. அன்றைய பாடல்கள் முதல் இன்றைய பாடல்கள் வரை இதில் அளிக்கப்படுகிறது. மிமிக்ரி நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகிறது |
ஸ்டார் சிங்கர் இனி 3 நாள்!
ராஜ் டிவியில், சனி, ஞாயிறு நாட்களில் இரவு 9 மணிக்கு ஸ்டார் சிங்கர் ஒளிபரப்பாகி வருகிறது. இனி வெள்ளியன்றும் ஒளிபரப்பப்படும் அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா நடுவராக வரும் இதில், இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்று மோதுவர். ஒவ்வொரு முறையும், முன்னணி திரை நட்சத்திரங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும் பங்கேற்று உடன் பாடுகின்றனர் |
ராஜ் டிவியில் திங்கட்கிழமை தோறும் காலையில் ஒளிபரப்பாகும் கொக்கரக்கோ நிகழ்ச்சியில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நகைச்சுவை திரைப்படங்களில் நடித்த நடிகர், நடிகையர் பங்கேற்று காலை நேரத்தை கலகலப்பாக்குகின்றனர். பல குரல் மன்னர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்குகின்றனர். |
ராஜ் டிவியில் திங்கட்கிழமை தோறும் காலையில் ஒளிபரப்பாகும் கொக்கரக்கோ நிகழ்ச்சியில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நகைச்சுவை திரைப்படங்களில் நடித்த நடிகர், நடிகையர் பங்கேற்று காலை நேரத்தை கலகலப்பாக்குகின்றனர். பல குரல் மன்னர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்குகின்றனர். |
ராஜ் டிவியில், சனி, ஞாயிறு நாட்களில் இரவு 9 மணிக்கு ஸ்டார் சிங்கர் ஒளிபரப்பாகி வருகிறது. இனி வெள்ளியன்றும் ஒளிபரப்பப்படும்
அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா நடுவராக வரும் இதில், இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்று மோதுவர். ஒவ்வொரு முறையும், முன்னணி திரை நட்சத்திரங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும் பங்கேற்று உடன் பாடுகின்றனர் |
ஸ்டார் சிங்கர் இனி 3 நாள்!
ராஜ் டிவியில், சனி, ஞாயிறு நாட்களில் இரவு 9 மணிக்கு ஸ்டார் சிங்கர் ஒளிபரப்பாகி வருகிறது. இனி வெள்ளியன்றும் ஒளிபரப்பப்படும் அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா நடுவராக வரும் இதில், இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்று மோதுவர். ஒவ்வொரு முறையும், முன்னணி திரை நட்சத்திரங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும் பங்கேற்று உடன் பாடுகின்றனர் |
ராஜ் டிவி'யில், சமுதாய நோக்கில் அளிக்கப்படும் வித்தியாசமான நிகழ்ச்சி அகடவிகடம்.
பாஸ்கர் ராஜ் இயக்கும் இந்த நிகழ்ச்சியில் பேசுவோரிடம் ஆவேசம் இல்லை; ஆணித்தரமான வாதம் உண்டு. ஆரோக்கியமான விவாதம் தான் இந்த மேடை. 375 வாரங்களை கடந்து விட்ட இந்த நிகழ்ச்சி சிறிது கூட தொய்வில்லாமல் தூள் கிளப்புகிறது. ஞாயிறு தோறும் பகல் 10.30க்கு. |
ராஜ் "டிவி'யில் வரும் 15ம் தேதி சுதந் திர தினத்தை ஒட்டி, காலை முதல் மாலை வரை, ஏகப்பட்ட தேசப் பற்று நிகழ்ச்சிகள் உள்ளன. வி.ஐ.பி.,க் கள் மற்றும் நட்சத்திர பேட்டிகள் உண்டு.
எல்லாரும் ரசிக்கும் படி சுவாரஸ்யத் துக்கு குறைவிருக்காது. * அறுசுவை அரங்கம்: வெள்ளிதோறும் மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பாகும் அறுசுவை அரங்கம் நிகழ்ச்சியில் பல்வேறு வித்தியாசமான உணவு வகைகள் சமைப்பது குறித்த தகவல்கள் தரப்படுகின்றன. குந்தவை தரும் குறிப்புகளும் அருமை. |
பெண்
ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது, `பெண்' நிகழ்ச்சி. சமையல் கலை, கலை நயமிக்க கைவினைப் பொருட்கள், சிறுதொழில் முன்னேற்றம் மற்றும் நலமான வாழ்வு போன்ற பெண்களுக்கான பல விஷயங்கள் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகின்றன. |
All times are GMT +1. The time now is 02:13 PM. |
Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2025, vBulletin Solutions, Inc.
Search Engine Friendly URLs by vBSEO 3.6.0 PL2