LOGO
Reply to Thread New Thread
Old 03-06-2006, 07:00 AM   #1
Peptobismol

Join Date
Oct 2005
Age
59
Posts
4,386
Senior Member
Default
pathos duet by Vaali.

சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன்...


longing composition of விஸ்வநாதன்'s solo pathos வயோலின் bleeds

காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் தாலாட்ட அவள் வருவளோ இல்லை மாட்டாளோ
அவள் வருவாளோ சுகம் தருவாளே

..
விஸ்வநாதன்'s orchestration is top class . பியானோ, flute , கிடார், தபலா

my favorite girl ஜானும்மா always Sparkling .

ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம் அவன் அனைப்பானோ எனை நினைப்பானோ அவன் அணைப்பானே எனை நினைப்பானே

Peptobismol is offline


Old 03-31-2006, 07:00 AM   #2
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
Vaali 1000 - vasanth tv

Vaali is a lyricist who even beyond 81 is writing lyrics for heroes
among the age group of 16. He has come through several generations as
MGR – Sivaji, Kamal – Rajini, ‘Vijay –Ajith’, and Simbu –Dhanush. The
fact being that there are of course interesting happenings in his life
Vaali himself opens out his heart regarding this. This is to be relayed
as a new program in ‘Vasanth TV’. h

The program is to play 1000 songs from the total number of songs that
Vaali has written. They have titled the program as ‘Vali 1000’. This
program has been made with several interesting aspects in it. This
program has been divided into five sections, and Kollywood icons have
taken an interview of Vaali in the section ‘Kollywood to Valiwood’.

Lyricist Vaali has opened in his heart and revealed several interesting
facts and at the same time answered sensational questions.

Particularly, cartoon Madhan during his interview with Vaali has asked
him whether he has mixed with actresses. As a reply, Vaali has told
blatantly that he has even taken hot drinks with them.

When an interviewer shot a question as to why lyricists always sing in
praise of politicians and spend their lives, Vaali retaliated by asking
whether it was the doubt about his praising Kalaignar. ‘What other
political party has favored lyrics and the lyricist? That is why I sang
in praise of Kalaignar.’ When a reporter shot the question about whether
MGR has not supported him, Vaali retaliated by stating that MGR too was
in DMK. ‘That’s why I told that.’

‘I am taking into account not an individual but the party.’, said
Vaali. Vaali shared all these at the press meet arranged for this
occasion. When asked about whether Kalaignar will be present for
interviewing him at the occasion Vaali told it would of course happen.

‘I have not invited anybody who has come now for the interview. The
program crew called these people and with no objection they came. If I
invite Kalaignar he will of course come.’ If this is to be one person’s
question, how would be other people’s question? Anyway, this program
which is to be relayed from January, will of course increase DRB rating
of Vasanth TV.
brraverishhh is offline


Old 07-06-2006, 07:00 AM   #3
PhillipHer

Join Date
Jun 2008
Age
59
Posts
4,481
Senior Member
Default
beautiful number by Raaja-Vaali team

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசில
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

( தென்றல் வந்து )

விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

( தென்றல் வந்து )

ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே
அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

( தென்றல் வந்து )

( வந்து வந்து போகுதம்மா )
PhillipHer is offline


Old 07-31-2011, 09:53 AM   #4
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default அன்றும் இன்றும் என்றும் -கவிஞர் வாலி
அன்றும் இன்றும் என்றும் இளமை இனிமை அதுதான் கவிஞர் வாலி
http://www.mayyam.com/talk/asset.php...2&d=1297198693
வாலிப கவிஞர், இன்றும் இளையவர்களுக்கும் எழுதுபவர் என்று ஏராளமான பட்டங்கள் இருந்தாலும் இவரது தமிழையும் நயத்தையும் அறியாதவர்கள் இருக்க முடியாது.

மறக்கப்பட்ட பாடல்களையும் இவரது கவி நயத்தையும் நினைவூட்ட இதோ அவர் பெயரில் நான் ஏற்கனவே ஆரம்பித்த திரி காணாமல் போன காரணத்தால் இதோ புது திரி.

பிள்ளையார் சுழியாக இதோ அவர் பெண்மை/சக்தி குறித்து தேவர் மகன் என்ற திரையில்
இசை ஞானி இளையராஜாவின் இசையில் எழுதிய இரண்டு பாடல்கள்

1. மணமகளே மணமகளே என்ற இனிய பாடல். சாரதா படத்தில் பஞ்சு அருணாச்சலத்தின் பாடலான மணமகளே என்ற முதல் அடியை எடுத்துக்கொண்டு நம் கவிஞர் எவ்வளவு அழகாக அதே சமயம் எளிமையாகவும் இனிமையாகவும் எழுதியிருக்கிறார்

மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும்
மங்கலமே மங்கலமே
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே...பொங்கிடுமே
குற்றம் குறை இல்ல ஒரு குந்துமணிச்சரமே
மஞ்சள் வளமுடனே என்றும் வாழணும் வாழணுமே

மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும்
மங்கலமே மங்கலமே
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே...பொங்கிடுமே

வலது அடி எடுத்து வைத்து வாசல் தாண்டி
வா வா பொன்மயிலே பொன்மயிலே
புகுந்த இடம் ஒளிமயமாய் உன்னால்தானே
மாறும் மாங்குயிலே...மாங்குயிலே
இல்லம் கோயிலடி அதி பெண்மை தெய்வமடி
தெய்வம் உள்ள இடம் என்றும் செல்வம் பொங்குமடி


மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும்
மங்கலமே மங்கலமே
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே...பொங்கிடுமே



2. மாசறு பொன்னே வருக*

சிலப்பாதிகாரத்தின் பாடலின் முதல் அடியையொற்றி இலக்கிய வார்த்தைகளை உபயோகித்து பெண்மையின் சிறப்பை பறைசாற்றும் வகையில் ரேவதி தாயான வேளையில் ஒலிப்பதாக அமைந்த பாடல் கவிஞரின் திறனுக்கு சான்று.

மாசறு பொன்னே வருக! திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக!!
மாதவன் தங்காய் வருக! மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக!!
கோல முகமும் குறுநகையும் குளிர்நிலவென
நீலவிழியும் பிறைநுதலும் விளங்கிடும் எழில்
நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும் (மாசறு)

நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம் உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே!
பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே!
திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே!
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே!
பாவம் விலகும் வினையகலும் உனைத்துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும் இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும் (மாசறு)



இரண்டு பாடல்களையும் இனிமையாக பாடியவர்கள் மின்மிணி மற்றும் ஸ்வர்ணலதா குழுவினர்
HedgeYourBets is offline


Old 07-31-2011, 03:53 PM   #5
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் இசை வெள்ளம் நதியாக ஓடும் அதில் இளம் நெஞ்சம் படகாக ஆடும்......m .g .r பாட்டு ...ஷங்கர் கணேஷ்....ஸ்ரீ.சௌந்தரராஜன்.
Lt_Apple is offline


Old 07-31-2011, 04:08 PM   #6
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
விஸ்வநாதன் let சுஷீலா dazzle in ஈஸ்வரி's territory ...இன்று வந்த இந்த மயக்கம்....காசேதான் கடவுளடா.....வாலி.

longing pathos நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா.....stunning சுசீலா
NeroASERCH is offline


Old 07-31-2011, 04:56 PM   #7
PhillipHer

Join Date
Jun 2008
Age
59
Posts
4,481
Senior Member
Default
compositions of P .B .ஸ்ரீனிவோஸ் romances சுஷீலா.

மை ஏந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்


காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேனிலா?
கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேனிலா?

மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
அவன் வருகையினால் இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன
மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
அவன் வருகையினால் இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன
பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ
ஒரு தலைவனை அழைத்து தனியிடம் பார்த்து தருகின்ற மனதல்லவோ.. தருகின்ற மனதல்லவோ
காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
கைவிரலாலே தொடுவதிலே இந்த பூமுகம் சிவந்ததென்ன
இரு கைகளினால் நீ முகம் மறைத்தாலே இந்த வையகம் இருண்டதென்ன
செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன
என்னை அருகினில் அழைத்து இரு கரம் அணைத்து மயக்கத்தை கொடுப்பதென்ன மயக்கத்தை கொடுப்பதென்ன
காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே


மாலையில் சந்தித்தேன்
மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும் போது
கைகளை மன்னித்தேன் ... தாமரைக் கன்னங்கள்.....எதிர்நீச்சல்.

vinatha.
PhillipHer is offline


Old 07-31-2011, 05:04 PM   #8
Peptobismol

Join Date
Oct 2005
Age
59
Posts
4,386
Senior Member
Default
early இளையராஜா masterpiece with கமல் and ஜானு.

ரோஜாக்களில் பன்னிர் துளி வழிகின்றதே அது என்ன தேன்?
அதுவல்லவோ
பருகாத தேன் அதை இன்னும் நீ பருகாததேன்? wordplay
Peptobismol is offline


Old 07-31-2011, 05:08 PM   #9
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
baroque Great going

Two more Vaali stunners from Panam Padaithavan

தன் உயிர் பிரிவதை சுஷீலாவின் குரலில்

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
நான் என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

என்னுடனே எந்தன் பூ உடல் வாழும்
உன்னுடனே எந்தன் பொன்னுயிர் போகும்

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
நான் என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

தெய்வத்தை நினைத்தேன் தேரென்று வளர்ந்தேன்
தென்றலை நினைத்தே பூவென்று மலர்ந்தேன்
தேரென்றும் இல்லை பூவென்றும் இல்லை
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்

மன்னனை நினைத்தே மாளிகை அமைத்தேன்
வள்ளலை நினைத்தே மையலை வளர்த்தேன்
மாளிகை இல்லை மன்னனும் இல்லை
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்



பவழ கொடியிலே முத்துக்கள் கோர்த்தால்
எல் ஆர் ஈஸ்வரி டி.எம்.எஸ்

ஆஹா.. ஓஹோ.. ஆஹா..
பவழக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்கொண்டு வந்தால்
பெண்மயில் என்றே பேராகும்
பவழக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்கொண்டு வந்தால்
பெண்மயில் என்றே பேராகும்
ஆ..ஆ..ஆஆஅ..
பூமகள் மெல்ல வாய்மொழி சொல்ல
சொல்லிய வார்த்தை பண்ணாகும்
பூமகள் மெல்ல வாய்மொழி சொல்ல
சொல்லிய வார்த்தை பண்ணாகும்
காலடித் தாமரை நாலடி நடந்தால்
காதலன் உள்ளம் புண்ணாகும் - இந்தக்
காதலன் உள்ளம் புண்ணாகும்

பவழக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்கொண்டு வந்தால்
பெண்மயில் என்றே பேராகும்
ஆ..ஆ..ஆஆஅ..

ஆடைகள் அழகை மூடிய போதும்
ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்
ஆடைகள் அழகை மூடிய போதும்
ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்
மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால்
வாழ்ந்திடும் காலம் நூறாகும் - இங்கு
வாழ்ந்திடும் காலம் நூறாகும்

பவழக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்கொண்டு வந்தால்
பெண்மயில் என்றே பேராகும்
NeroASERCH is offline


Old 07-31-2011, 06:10 PM   #10
Drugmachine

Join Date
Apr 2006
Posts
4,490
Senior Member
Default
stunning composition of விஸ்வநாதன் again with his singular violin with சுஷீலா ஸ்வீட் humming

செம்மாங்கனி புன்னகை நல்லோவியம்
செவ்விதழ் தேன்மாதுளை
பொன்மொழி சொல்லோவியம்
செம்மாங்கனி புன்னகை நல்லோவியம்
செவ்விதழ் தேன்மாதுளை
பொன்மொழி சொல்லோவியம்

சிந்துநடை போடும் பாற்குடம்
சின்ன விழி பார்வை பூச்சரம்
என்ன மேனியோ இன்னும் பாடவோ
தமிழ் தேடவோ ....
மெல்லபோ ....

நாயகன் அவன் ஒரு புறம்.....ஒரு விடுகதை ஒரு தொடர்கதை......கங்கை அமரன்...யேசுதாஸ் & ஜானு....வாலி வரிகள்.


படகோட்டி ஆல்பம்....Amazing stuff by the poet for M.S.V


சுஷீலா's pathos ...ஆடாமல் ஆடுகிறேன்.....
Drugmachine is offline


Old 07-31-2011, 07:41 PM   #11
Raj_Copi_Jin

Join Date
Oct 2005
Age
48
Posts
4,533
Senior Member
Default
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்......மறுபடியும்.....இளையராஜா, வாலி, பாலா ..gem of a teamwork.
பாடல்வரிகள்....sober mood but encouraging

vinatha.
Raj_Copi_Jin is offline


Old 08-01-2011, 06:38 AM   #12
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default
காதல் என்றொரு சிலை வடித்தேன் அதை
கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
காதல் என்றொரு சிலை வடித்தேன் அதை
கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்

பாட்டு வரும்.......வாலி.
நான் ஆணை இட்டால்....ஸ்ரீ.விஸ்வநாதன்.
ஸ்ரீ.சௌந்தரராஜன்...சுசி.


MGR close -up லே வந்து சரோ வை ஆசையா பார்ப்பார்...very powerful look ...eternal imprisonment of heart .Great man knows the importance of romance , intimacy , passion and affection . He knows to take care of his girl .

சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் பாதியும் நானே
பாட்டு வரும்....
பாட்டு வரும்.......
உன்னை பார்த்துக்கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்


vinatha.
radikal is offline


Old 08-01-2011, 07:46 AM   #13
Paul Bunyan

Join Date
Jul 2007
Age
59
Posts
4,495
Senior Member
Default
ஆணிப்பொன் தேர்கொண்டு மாணிக்கச் சிலையென்றுவந்தாய் நின்றாய் இங்கே காணிக்கைப் பொருளாகும் காதல் என் உயிராகும் நெஞ்சை தந்தேன் அங்கே...

விஸ்வநாதன்'s சாருகேசி.

அழகிய தமிழ்மகள் இவள் இருவிழிகளில் எழுதிய மடல் மெல்லமொழிவது உறவெனும் குறள் படித்தால் ரசிக்கும் கனிபோல இனிக்கும்

அழகிய தமிழ்மகள் இவள் இருவிழிகளில் எழுதிய மடல் மெல்லமொழிவது உறவெனும் குறள் படித்தால் ரசிக்கும் கனிபோல இனிக்கும்

வானுலகம் என்னும் மாளிகையில் மின்னும் பூமகளின் கன்னம் தேனிலவின் வண்ணம்
வானுலகம் என்னும் மாளிகையில் மின்னும் பூமகளின் கன்னம் தேனிலவின் வண்ணம் நீலவிழிப் பந்தல் நீயிருக்கும் மேடை கோலமிடும் ஆசை தூதுவிடும் ஜாடை
இளமையில் இனியது சுகம் இதைப்பெறுவதில் பலவித ரகம் இந்தஅனுபவம் தனியரு விதம் மலரும் வளரும் பல நாள் தொடரும் அழகிய தமிழ்மகள் இவள் இருவிழிகளில் எழுதிய மடல் மெல்லமொழிவது உறவெனும் குறள் படித்தால் ரசிக்கும் கனிபோல இனிக்கும்

பெபெபெபெபே... விஸ்வநாதா, cut it out

பாலில் விழும் பழம் எனும் போதை பெறும் இளம் மனம் அள்ளத்தான் அள்ளிக்கொள்ளத்தான்.
காதல் நிலா முகம் முகம் கண்ணில் உலா வரும் வரும்
காதல் நிலா முகம் முகம் கண்ணில் உலா வரும் வரும் மெல்லத்தான் நெஞ்சைக் கிள்ளத்தான் கொடியிடை விளைவது கனி இந்த கனியிடை விளைவது சுவை அந்தசுவை பெற நமக்கென்ன குறை நெருக்கம் கொடுக்கும் நிலைதான் மயக்கம்

அழகிய தமிழ்மகள் இவள் இருவிழிகளில் எழுதிய மடல் மெல்லமொழிவது உறவெனும் குறள் படித்தால் ரசிக்கும் கனிபோல இனிக்கும்

பாவை உனை நினக்கையில். பாடல் பெறும் கவிக்குயில் பக்கம் வா..... இன்னும் பக்கம் வா கோவை இதழ் இதோ இதோ கொஞ்சும் கிளி அதோ அதோ.....
கோவை இதழ் இதோ இதோ கொஞ்சும் கிளி அதோ அதோ..... இன்னும் நான் சொல்ல இன்னும் நான் சொல்ல வெட்கம்தான் மழை தரும் முகிலென குழல் நல்லஇசை தரும் குழலென குரல் உயிர்ச்சிலையென உலவிடும் உடல் நினைத்தேன் அணைத்தேன் மலர் போல பறித்தேன்

vinatha
Paul Bunyan is offline


Old 08-06-2011, 06:21 AM   #14
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
"ராம நாமமொரு வேதமே ராக தாளமொடு கீதமே"

படம்: ஸ்ரீராகவேந்திரர்
இசை: இளையராஜா
வரிகள்:வாலி
குரல்கள்:வாணிஜெயராம்,யேசுதாஸ்

பாலசந்தர் தயாரிப்பில் ரஜினியின் 100'வது படமாக வெளிவந்தது ஸ்ரீ ராகவேந்திரர்.
ரஜினியின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய படம் இது.

இளையராஜாவும் வாலியும் சேர்ந்து பல அருமையான மெட்டுக்களை உருவாக்கினர்

அதில் மிகவும் குறிப்பிடத்தக்க பாடல்கள் இரண்டு

1. ராமநாமமொரு வேதமே

2. ஆடல் கலையே தேவன் தந்தது


அம்மனோ அம்மானோ, நரனோ நாராயணனோ யாரைப்பற்றியும் எல்லோருக்கும் புரியும் விதமாக சொல்ல வாலியை தவிர வேறு ஆள் உண்டா??

வாணிஜெயராமும், யேசுதாஸும் அழகாக பாடல் இதோ ராமமாலை

ராம நாமமொரு வேதமே
ராக தாளமொடு கீதமே
மனமெனும் வீணை மீட்டிடுவோம்
இசையெனும் மாலை சூட்டிடுவோம்
அருள் மிகு
ராம நாமமொரு வேதமே
ராக தாளமொடு கீதமே

அவன் தான் நாரணன் அவதாரம்
அருள்சேர் ஜானகி அவன் தாரம்
கெளசிக மாமுனி யாகம் காத்தான்
கெளதமன் நாயகி சாபம் தீர்த்தான்
ஆஆ..
ஓர் நவமியதில் நிலமெல்லாம் புலர
நினைவெல்லாம் மலரவே
உலகு புகழ்
தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க
மறையெல்லாம் துதிக்கவே
தயரதனின் வம்சத்தின் பேர் சொல்ல
வாழ்த்துக்கள் ஊர் சொல்ல
விளங்கிய திருமகனாம்
ஜனகன் மகள் வைதேகி பூச்சூட
வைபோகம் கொண்டாட
திருமணம் புரிந்தவனாம்
மணிமுடி இழக்கவும்
மரவுறி தரிக்கவும்
அரண்மனை அரியணை துறந்தவனாம்
இனியவள் உடன் வர
இளையவன் தொடர்ந்திட
வனங்களில் உலவிட துணிந்தவனாம்
ஸ்ரீ ராம சங்கீர்த்தனம்
நலங்கள் தரும்
நெஞ்சே மனம் இனிக்க
தினம் இசைக்க குலம் செழிக்க
நிதம் நீ சூட்டிடு பாமாலை
இதுதான் வாசணை பூமாலை
இதைவிட ஆனந்தம் வாழ்வில் ஏது
இசை சேர் மனமே நாளும் ஓது


ராம நாமமொரு வேதமே
ராக தாளமொடு கீதமே
மனமெனும் வீணை மீட்டிடுவோம்
இசையெனும் மாலை சூட்டிடுவோம்
அருள் மிகு
ராம நாமமொரு வேதமே
ராக தாளமொடு கீதமே

ராமாயணத்தை முழுவதும் ஒரு பாடலிலேயே சொல்லிய வாலியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
NeroASERCH is offline


Old 08-06-2011, 09:57 AM   #15
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
தகதகதினதத ததம்தோம்....
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா(2)
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
தாய் மடியில் பிறந்தோம் தமிழ்மடியில் வளர்ந்தோம்
நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
தகினதத ததம்தோம்

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை(2)
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை (2)
உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு (2)
பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று (2)
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா (உனக்கென்ன மேலே )
doctorzlo is offline


Old 08-18-2011, 04:04 AM   #16
Paul Bunyan

Join Date
Jul 2007
Age
59
Posts
4,495
Senior Member
Default
soft romance & Vaali

ennai thodarndadhu kayil kidaithadhu from Maamiyar Veedu (KJY,SJ)



Kannale kadhal kavithai sonnale from Aathma

ஆண் : கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

பெண் : கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

ஆண் : கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

பெண் : கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

ஆண் : கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

(இசை) சரணம் - 1

பெண் : கடற்கரை தனில் நீயும் நானும்
உலவும் பொழுது

ஆண் : பறவையை போல் கானம் பாடி
பறக்கும் மனது

பெண் : இங்கு பாய்வது புது வெள்ளமே
இணை சேர்ந்தது இரு உள்ளமே

ஆண் : குளிர் வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன துணையிலே

பெண் : இளம் மேனி உன் வசமோ

ஆண் : கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

பெண் : கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

(இசை) சரணம் - 2

பெண் : உனக்கென மணி வாசல் போலே
மனதை திறந்தேன்

ஆண் : மனதுக்குள் ஒரு ஊஞ்சல் ஆடி
உலகை மறந்தேன்

பெண் : வலையோசைகள் உன் வரவை கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று

ஆண் : நெடுங்காலங்கள் நம் உறவை கண்டு
நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு

பெண் : இன்ப ஊர்வலம் இதுவோ ?

ஆண் : கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

பெண் : கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

ஆண் : கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

பெண் : கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

ஆண் : கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக


3. sundari kannal oru sethi from Thalapathi.. what a lyric by the veteran
Paul Bunyan is offline


Old 08-19-2011, 12:53 PM   #17
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
2 stunners of vaali for Raja

Matha un kovilil from Achani



Thaalattu pillai undu from Achani
Fegasderty is offline


Old 09-10-2011, 05:38 AM   #18
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
another beautiful letter song by Vaali. How many letter songs starting from Anbulla maan vizhiye . all by vaali
NeroASERCH is offline


Old 09-13-2011, 03:32 AM   #19
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
Recent Best by Vaali

thaakuthe kan thaakuthe ..for yuvan
Slonopotam845 is offline


Old 09-28-2011, 07:15 AM   #20
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
Some more Vaali beauties under IR's baton

Kalyana Malai kondadum penne from pudhu pudhu arthangal




Nee padhi naan paadhi kanne from Keladi kanmani



Thoongatha vizhigal rendu from Agni nakshatram
brraverishhh is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 05:19 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Friendly URLs by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity