Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
|
![]() |
![]() |
#6 |
|
திருமதி செல்வம்
சன் டிவியில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த "திருமதி செல்வம்'' தொடர், இப்போது இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிறது. தொடருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தநேரமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. வாழ்வில் எதற்குமே ஆசைப்பட்டிராத செல்வம் முதல் முறையாக அர்ச்சனாவைப் பார்த்து ஆசைப்படுகிறான். அவளை அடைவதற்காக ஒரு பொய் சொல்கிறான். ஆனால் அந்தப் பொய்யினாலேயே அர்ச்சனா அவனை ஏற்காமல் புறக்கணிக்கிறாள். தான் பொய் சொன்னது அவளது நல் வாழ்விற்காகத்தான் என்பதை அவளுக்கு புரிய வைக்கப் போராடுகிறான் செல்வம். ஒரு கட்டத்தில் நிஜம் புரிந்த அர்ச்சனா, செல்வத்தோடு இணைந்து வாழ நினைத்தபோது, விதி பெற்றவர்கள் ரூபத்தில் இருவரையும் நிரந்தரமாகப் பிரிக்கப் பார்க்கிறது. விதியின் சதியைத்தாண்டி அந்த நல்லவர்கள் வாழ்வில் இணைவது எப்போது என்பதை விளக்குவதே இந்த நெடுந்தொடரின் கதை.அர்ச்சனா, செல்வமாக அபிதா - சஞ்சீவ் நடிக்கிறார்கள். திரைக்கதை: வே.கி.அமிர்தராஜ், சி.இல.அமிர்தராஜ்; வசனம்: வே.கி.அமிர்தராஜ்; ஒளிப்பதிவு: எஸ்.டி.மாட்ஸ்; கதை, இயக்கம்: எஸ்.குமரன்; தயாரிப்பு: விகடன் டெலிவிஸ்டாஸ். |
![]() |
![]() |
#7 |
|
Thirumathi Selvam is one and one Super Hit mega serial in the afternoon hours between the house wives watching in their leisure hours 1.30 pm in the afternoon. But from this coming 17th Monday it is to be telecast at 8.00 pm. The change was effected after most of the Office goers, especially womenfolk requested the Vikatan Office to arrange it to telecast in nights. This is a victory of the producer Vikatan’s after Kolangal. But most of the viewers tell Thirumathi Selvam is the best than Kolangal.
Selvam is a Machanic decided not to get married because he works hard for his familyas the sole bread winner of the family. He gives up his studies and makes his younger brother and younger sister to further their higher education. He falls in love with Archanna after seeing her in a temple. For his marriage proposal he has been goaded to utter a lie that he is an engineering graduate. After the marriage, the true colour of Selvam comes to known to the entire family and they all start hating him including his wife Archana who refuses to live with him. But Archana understand’s the love of Selvam and she finally decides to live with him. In the coming week the story moves around how both the couple takes challenge to fight against their problem in order to live happily. THIRUMATHI SELVAM from Monday to Friday at 8.00 Pm in Sun Tv channel. Produced by Vikatan Televista and Directed by S. Kumaran |
![]() |
![]() |
#8 |
|
நேற்றிரவு ஒளிபரப்பான எபிசோடில்...
மெக்கானிக் ஷாப்பில் செல்வத்தின் கை விரலில் அடிபட்டு, சாப்பிடமுடியாமல் அவன் தவிக்கும் நேரம், அவனுக்கு அர்ச்சனா சோறு ஊட்டிவிட, அப்போது அவர்கள் இருவருக்குமிடையில் அந்த பார்வைப் பரிமாற்றமும், வெட்கம் கலந்த முகபாவமும் கண்களில் நீர் கோர்த்தது. உண்மையான புருஷன் பெஞ்சாதி கெட்டார்கள் போங்க... சஞ்சீவ் மற்றும் அபிதா..... FANTASTIC... ![]() ![]() |
![]() |
![]() |
#9 |
|
திருப்பங்களுடன் திருமதி செல்வம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "திருமதி செல்வம்'' தொடர், பரபரப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் தொடர்கிறது. செல்வமும் அவனது மனைவியும் சேர்ந்து வாழ உறவுத் தடைகள் இயல்பாக அமைந்து விடுகின்றன. தன் தாயாருக்காக திருமதி செல்வமும், குடும்பத்துக்காக செல்வமும் தங்கள் பிரிவை தற்காலிகமாக நியாயப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இருவருக்குள்ளும் உள்ளூர இணையும் நாளை எதிர்நோக்கித் துடிக்கிறது, இதயக் கடிகாரங்கள். இதற்கிடையே செல்வத்தின் தம்பி, தான் விரும்பிய பெண்ணுடன் ஊரைவிட்டுப் பறக்கிறான். பெண்ணின் அப்பா வசதியானவர். கவுரவம் கண்ணை மறைக்க, மணமகனை பிடித்து தண்டிக்க திட்டமிடுகிறார். திட்டம் நடவாமல் போக, அவனைப் பிடிக்க ஒரேவழியாக செல்வத்தை போலீசிடம் மாட்டி விடுகிறார். " உன் தம்பி இருக்குமிடம் உனக்குத் தெரியாமல் இருக்காது'' என்று கேட்டு லத்தியால் லவட்டுகிறது போலீஸ். லாக்கப்பில் ரத்தச் சிதறலுடன் கிடக்கும் கணவன் செல்வம் பற்றி தகவல் தெரிந்து அம்மாவிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் போலீஸ் நிலையம் ஓடோடி வருகிறாள் திருமதி செல்வம். அவன் கோலம் பார்த்து கதறுகிறாள். "உங்கள் தம்பி இருக்குமிடத்தைத்தான் சொல்லிவிடுங்களேன்'' என்கிறாள், கடைசியில் கண்ணீருடன். இப்போது செல்வம் "நீயும் இதற்குத்தான் வந்தாயா?'' என்று துரத்தியடிக்கிறான். கடந்த வாரம் இந்த லாக்கப் காட்சியை சென்னை ஐயப்பன்தாங்கலை அடுத்த காட்டுப்பாக்கத்தில் உருக்கமும் உணர்வுமாய் படம் பிடித்தார், இயக்குனர் எஸ்.குமரன். செல்வம்- திருமதிசெல்வமாக சஞ்சீவ்- அபிதா நடித்தார்கள். நட்சத்திரங்கள்: `சேது' அபிதா, சஞ்சீவ், வடிவுக்கரசி, பீலிசிவம், ஜெயமணி, டிங்கு, கவுதமி, `விழுதுகள்' சந்தானம், கவிதா, ஸ்ரவன், அர்ச்சனா, பிரியா, ராகவி, பிர்லா போஸ், அபர்ணா, ஸ்வப்னா, ராமச்சந்திரன், ஷைலஜா. திரைக்கதை: அமிர்தராஜ் -அமல்ராஜ். வசனம்: அமிர்தராஜ். ஒளிப்பதிவு: மார்ட்ஸ். பின்னணி இசை: கிரண். பாடல் இசை: இமான். இசை: யுகபாரதி. இயக்கம்: எஸ்.குமரன். நன்றி: தினதந்தி |
![]() |
![]() |
#12 |
|
|
![]() |
![]() |
#13 |
|
|
![]() |
![]() |
#14 |
|
|
![]() |
![]() |
#15 |
|
|
![]() |
![]() |
#16 |
|
ஞாயிறு கொண்டாட்டம்
'மல்லிகைப் புன்னகை!' சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிவுற்ற 'சிந்துபாத்' தொடரில் மல்லிகை ராணியாக வந்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்த மகேஸ்வரி தற்போது 'மந்திரப் புன்னகை' படத்தில் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரோடு பேசினோம்: சின்ன திரையைத் தேர்ந்தெடுத்தது எப்போது? பதினோராம் வகுப்பு படிக்கும்பொழுது சன் மியூசிக் சேனலில் வி.ஜேவிற்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்திருந்தார்கள். அதைப் பார்த்துவிட்டு சும்மா முயற்சி செய்து பார்ப்போமே என்று நானும் என் அக்காவும் விண்ணப்பித்து இருந்தோம். அதில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்படித்தான் சின்ன திரையில் கால் வைத்தேன். அதன் பிறகு படித்துக்கொண்டே ஓய்வு நேரத்தில் சன் மியூசிக்கில் காம்பயரிங் செய்து வந்தேன். பளஸ் டூ முடித்ததும் கல்லூரிக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் முழுநேர வேலை பார்த்துக் கொண்டே கரஸில் பி.காம்., படித்தேன். அதன்பிறகுதான் கலைஞர் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. இன்று வரை காம்பயரிங் செய்து வருகிறேன். தொடர்களில் நடிக்கிறீர்களா? நான் கடைசியாக நடித்த தொடர் சிந்துபாத். அதில் 'மல்லிகை ராணி'யாக நடித்திருந்தேன். அதைத் தவிர நிறைய தெலுங்கு தொடர்களில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு இரண்டு வருடமாக தொடர்களில் நான் நடிக்கவில்லை. கலைஞர் டிவியிலும், இசையருவியிலும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறேன். இதைத் தவிர தற்போது பெரிய திரையில் கரு.பழனியப்பன் இயக்கும் 'மந்திர புன்னகை' என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு நல்ல கதாபாத்திரம். மந்திரப் புன்னகை கதைக்கு உங்களை எப்படித் தேர்வு செய்தார்கள்? கரு. பழனியப்பன் ஸார் ஆபிஸில் இருந்து போன் பண்ணி கூப்பிட்டார்கள். போய் பார்த்தேன். போனதும் இது, அதுன்னு எதுவும் கேட்கவில்லை. பார்த்தவுடனே அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருந்ததனால் வாய்ப்பளித்தார்கள். இப்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறேன். மூன்று பெண்களை மையமாக வைத்து நடக்கிற கதை. அதில் ஒரு நானும் ஒரு நாயகியாக நடிக்கிறேன். எனக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கேரக்டர். ஸ்டேஜ் ஷோவிற்கும், தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதற்கும் என்ன வித்தியாசம்? தொலைக்காட்சியைப் பொருத்தவரை ஓர் அறைக்குள் காமிராவை வைத்து நாம் என்ன பேசப் போகிறோமோ அதைப் பதிவு செய்வார்கள். ஓரளவுக்கு நாம் முன்பே அதற்குத் தயார் செய்து கொண்டு வந்துவிடுவோம். அப்படி ஏதாவது தவறாகப் பேசிவிட்டாலும் மறுடிபடியும் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பிருப்பதால் ஒரு கான்ஃபிடன்ட் இருக்கும். ஆனால், மேடை நிகழ்ச்சிகள் அப்படியில்லை. நம் முன் அமர்ந்திருக்கும் மக்கள் அனைவரின் முன்னிலையிலும் பேச வேண்டும். நாம் என்ன பேசுகிறோம் என்பதை அவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். அதனால் மிக ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். சினிமாவில் நடிக்க உங்கள் கணவர் ஒத்துழைப்பு கொடுக்கிறாரா? கணவர் வெங்கட். பிஸினஸ் மேன். சமீபத்தில்தான் எங்களுக்குத் திருமணம் நடந்தது. டிவியில் என்னைப் பார்த்துவிட்டு அவருக்குப் பிடித்து போய், இந்தப் பெண்ணைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று வீட்டில் சொல்லி என்னைத் திருமணம் செய்து கொண்டார். அது மட்டுமில்லாமல் சினிமாத்துறையில் அவருக்கும் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்தத் துறையைப் பற்றி அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. வேறு யாராவது இப்படிப் புரிந்து கொண்டிருப்பார்களா என்பது தெரியவில்லை. அந்த விதத்தில் அவர் எனக்கு நூறு சதவிகிதம் உறுதுணையாக இருக்கிறார். அவர் மட்டும் இல்லை என் கணவர் வீட்டிலும் எல்லாரும் என்னிடம் அன்பாகவும், ஆதரவாகவும் இருக்கிறார்கள். http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title= |
![]() |
![]() |
#17 |
|
|
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|